Saturday, January 04, 2014

ரோஜா செடிகள் அழகாக மலர பராமரிப்பு முக்கியம்.....



பூஞ்செடிகள் வளர்ப்பவர்கள் வீட்டில் பெரும்பாலும் ரோஜா செடிகள் இல்லாமல் இருக்காது. எத்தனை அழகு செடி    களைகொண்டு மலர் தோட்டத்தை உருவாக்கி இருந்தாலும் வீட்டையும், கூந்தலையும் அலங்கரிக்கும் ரோஜா செடிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் மனதை கவருவதற்காகவே வண்ண வண்ண நிறங்களில் பூக்கும் ரோஜா செடிகள் நர்சரி கார்டன்களில் கிடைக்கின்றன. அவைகள் வீட்டு தோட்டத்தில் மலர்ந்து விதவிதமான வண்ணங்களில் காட்சி தரும் அழகே தனி தான்.
இருப்பினும் ரோஜா செடிகளை வளர்த்து பராமரிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. மனதை மயக்கும் ரோஜா மலர்கள் செழிப்பாக வளர்ந்து பூத்து குலுங்கும் அழகை காண்பதற்கு அதிகம் மெனக்கெட வேண்டியது இருக்கும். அவைகளை பராமரிப்பதை பொறுத்தே அதன் அழகு குறைபடாமல் காட்சி தரும். முறையாக பராமரிக்காவிட்டால் வளர்க்க தொடங்கிய சில நாட்களில் இலைகள் வறண்டு உதிர்ந்து போய் பரிதாபமாக காட்சி அளிக்க தொடங்கி விடும். அல்லது எதிர்பார்த்த வளர்ச்சி இல்லாமல் பூக்கள் அடுத்தடுத்து மலர்வதில் தாமதம் ஏற்படும். இந்த பிரச்சினைகளை தவிர்க்க ரோஜா செடிகளை வளர்க்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் சிலவற்றை பார்ப்போம்.
* ரோஜா செடியை வளர்க்கும் தொட்டியின் அடியில் செம்மண் கலவை, இயற்கை உர எருக்கலவையை நிரப்ப வேண்டும். அதன்பின் மண் கலவைக்கு நடுவில் செடியை நடவு செய்து மண்ணை அணைக்க வேண்டும்.
* செடியின் வேர்களை நன்றாக சுத்தம் செய்தால் புதிய மண்ணை ஏற்றுக்கொள்வதற்கும், வேர் வளர்ச்சி அடைவதற்கும் உதவியாக இருக்கும்.
* தொட்டியில் மண், இயற்கை எரு கலவையை அடுத்தடுத்து மாறி மாறி நிரப்புவது செடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தொட்டியில் பாதி மண் கலவை நிரப்பியவுடன் தண்ணீர் ஊற்ற வேண்டும். அது நன்கு உறிஞ்சப்பட்ட பிறகு மண், இயற்கை எரு கலவையை தொட்டி முழுவதும் நிரப்புவது நல்லது.
* தொட்டியில் தேங்கி நிற்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது. மண் உலர்ந்து போகாத அளவிற்கு தண்ணீர் விட வேண்டும். அதிலும் அடிப்பரப்பில் இருக்கும் மண் உலர்ந்து போகும் நிலையை அடையும் போது தான் தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டும். தினமும் தண்ணீர் ஊற்றவேண்டும் என்று கட்டாயம் இல்லை. மண்ணில் இருக்கும் ஈரப்பதத்தை கவனித்து தான் தண்ணீர் விட வேண்டும். ரோஜா செடியின் மீதும் சிறிதளவு நீர் தெளிக்கலாம்.
* ரோஜா செடிகள் பூச்சிகளின் பாதிப்புக்கு உட்படாமல் இருக்க இயற்கை பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். சோப்பு தண்ணீரை தெளித்தால் கூட பூச்சிகள் செடியை அண்டாது.
* செடியில் இருக்கும் இலைகள் அழுகும் நிலையில் இருந்தாலோ, நிறம் மாற தொடங்கினாலோ அது உதிரும் வரை காத்திராமல் இலைகளை நீக்கிவிட வேண்டும்.
* ரோஜா செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மிக அவசியம். தினமும் 6 மணி நேரமாவது செடியில் சூரிய ஒளி படும்படி பார்த்து கொள்வது நல்லது. செடிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். தொட்டிகளுக்கு இடையே போதிய இடைவெளியும் இருக்க வேண்டும்.
* அதேநேரத்தில் ஈரப்பதம் அதிகம் இல்லாத இடத்தில் தொட்டிகளை வைப்பது நல்லது. அதிலும் குளிர்காலத்தில் கூடுதல் பராமரிப்பு அவசியம்.
* குளிர்காற்று ரோஜா செடிகள் மீது படாத இடத்தில் தொட்டிகளை வைக்க வேண்டும். காற்று வரும் திசையில் தொட்டிகளையொட்டி அடைப்புகளை வைத்தும் செடிகளை பாதுகாக்கலாம். மேல்பகுதி சூரிய வெளிச்சம் படும் படி திறந்திருக்க வேண்டும்.
* குளிர்காலத்தில் ரோஜா செடிகள் வேகமாக வறண்டு நீர் பற்றாக்குறையை சந்திக்கும். ஆகவே சீரான இடைவெளியில் தண்ணீர் ஊற்றி வர வேண்டும். அதற்காக வேர் வரை நீர் ஊருவிச்செல்லும் வகையில் தண்ணீர் ஊற்ற தேவையில்லை. மண் மிதமான ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* தொட்டிக்குள் தூசிகள், உதிர்ந்த இலை காம்புகள் இல்லாதவாறு அப்புறப்படுத்த வேண்டும். அது பூச்சிகள் செடியை ஆக்கிரமிப்பதை தடுக்க உதவும்.
* குளிரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் சமயம் ரோஜா செடிகள் வெகுவாக பாதிக்கப்படும். அந்தநேரத்தில் தொட்டிகளை வீட்டுக்குள் வைத்து வளர்க்கலாம். அங்கு மிதமான வெப்ப சூழல் நிலவுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஜன்னல் ஓரம் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைக்கலாம். அப்படி வைக்கும்போது குளிர் காற்று ரோஜா செடிகளை தாக்காமல் இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.
Gratitude : dinathanthi 

Tuesday, September 03, 2013

கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல், மன.. மாற்றங்கள்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் எதுவும் புரியாமல் விழிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த மாற்றங்கள் மேல் எரிச்சலோ, வெறுப்போ எழும். இவற்றைத் தவிர்க்க எவ்வாறான மாறுதல்கள் உடலில் ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே.

முதல் மூன்று மாதம் : பதினான்கு வாரங்கள் வரை எந்த நேரத்திலும் (காலையில் மட்டுமல்ல) அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியின் உணர்வு ஏற்படலாம். இதற்கு உங்கள் மாறும் ஹார்மோன்களே காரணம்.
உங்கள் மார்பகத்தை தாய்ப்பால் கொடுக்கத் தயார் செய்வதற்காக நேரிடும் ஹோர்மேனஸ் மாறுதல்கள் காரணமாக மார்பகம் வீங்குகிறது. மிருதுவாகிறது.

மூக்கினுளிருக்கும் லைனிங்கில் கூடுதலான அழுத்தம் இருப்பதால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. இது கர்ப்பப்பையினுள் உள்ள லைனிங் போலவே உள்ளது. கருத்தரிப்பினால் இரண்டிலும் அதிகமான இரத்த ஓட்டம் இருக்கிறது.

அதிகமான சோர்வை அதிகபட்ச பெண்கள் உணருகிறார்கள். இதற்குக் காரணம் ஒரு குழந்தைக்கு வடிவம் கொடுக்க உங்கள் உடல் அதிக அளவு சக்தியை உபயோகிக்கிறது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பிற்குக் காரணம் கர்ப்பப்பை வளர்ந்து, மூத்திரப்பையை அழுத்துவதுதான்.

மார்னிங் சிக்னெஸ் உள்ள பெண்கள் மாவு சத்துள்ள உணவுப் பண்டங்களுக்காக சில சமயம் ஏங்குகின்றனர். ஏனெனில் மாவுச் சத்து குமட்டலை அடக்க உதவுகிறது.

கருத்தரித்த நிலையின் மாஸ்க் என்பது கன்னத்திலும் மூக்கிலும் ஆங்காங்கே காணப்படும். இந்த அனுபவம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. பிரசவத்திற்கு பிறகு இது மறைந்துவிடுகிறது. இதற்கு ஹார்மோன்களின் மாற்றங்கள் மற்றும் சூரிய ஒளியே காரணம்.

இரண்டாவது மூன்று மாதம் : முதல் மூன்று மாத கால அசௌகரியங்கள் மறைந்தவுடன் ஒரு மொத்த ஆரோக்கியமான உணர்வு திரும்புகிறது.
இடுப்பு தடிப்பாகிறது. அடிவயிறு ரவுண்டாகவும் உறுதியாகவும் ஆகிறது.
நெஞ்சில் எரிப்பு அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், கர்ப்பப் பை வளரும்போது, வயிற்றை அழுத்தி, உணவு செல்லும் குழாயைக் குருக்குகிறது. வயிற்றில் அமிலமும் அதிகமாக உற்பத்தியாகிறது.

கர்ப்பப் பை குடல்கள் மீது அழுத்துவதால், உணவின் போக்கு குறைகிறது. வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மார்பகம் மற்றும் அடிவயிற்றின் மீது தழும்புகள் ஏற்படுகின்றன.
அரிப்பு, சருமம் ஸ்ட்ரெச் ஆவதால் ஏற்படுகிறது.

சாதாரண பிக்மெண்டின் மாறுதல்களின் ஒரு பங்காக முலைக்காம்பைச் சுற்றியுள்ள சருமம் கருமையாகிறது. தொப்புள் வரை அல்லது அதற்கு மேலேயும் ஒரு மெல்லிய கருமை ரேகை வருகிறது.

குழந்தையின் அசைவு யாரோ லேசாகக் குத்துவதைப் போலிருக்கும்.
உணவுக்காக ஏக்கம் இதில் எழும். நெஞ்செரிச்சலை அடக்க எலுமிச்சை வகைப் பழங்கள் நல்லது. முக்கியமாக உப்பைக் குறைப்பது முக்கியம்.

மூன்றாவது மூன்று மாதம் : உங்கள் முதுகுக்கு ஆதரவளிக்கும் தசைநார் மற்றும் தசைகள் மீது அதிகமாக அழுத்தமிருப்பதால் முதுகுவலி ஏற்படுகிறது.

நீங்கள் கீழே படுத்துக் கொள்வதால் காலில் இழுப்பு வருகிறது. உங்கள் உடலில் இரத்தத்தின் கொள்ளளவு அதிகரிக்கிறது. ஈர்ப்பு காரணமாக இரத்தம் கால்களுக்குச் செல்கிறது. ஆகையால், தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு, கால்களில் இழுப்பு வருகிறது.

மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு காரணம், குழந்தை உதரவிதானம் மீது அழுத்துகிறது. சுவாசப் பை விரிந்து கொடுப்பதில்லை மற்றும் உங்களுக்கு வேண்டிய அளவு வாயு கிடைப்பதில்லை.

குழந்தையின் அசைவைக் காண முடிகிறது. இப்போது குழந்தையின் எடை கூடுகிறது மற்றும் அதன் உதையையும், விக்கலையும் கூட நீங்கள் உணர முடிகிறது.

உறங்குவதில் கடினமாக இருக்கும். இதற்கு காரணம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மற்றும் எடை அதிகரிப்பினால் ஏற்படும் அசௌகரியங்களாகும்.

இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டவர்களுக்கு இந்த மாற்றங்கள் விரும்பத்தக்கவையாக இருக்கும். ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மனம் தயாராகிவிட்ட உணர்வு எழும். தாயாகப்போகும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்.

thanks  for kumutham

குங்குமப்பூவின் மகிமை



 குங்குமப்பூவை முந்தைய நாளே வெந்நீரில் போட்டு ஊறவைத்து, மறுநாள் அதை அரைத்து முகத்தில் பத்துபோல் போட்டு, அரைமணிநேரம் கழித்து கழுவுங்கள். இரும்பு சத்துக் குறைவினால் உண்டாகும் கண்ணின் கீழ் கருமை, கரும்புள்ளிகள், திட்டுக்கள் எல்லாம் மறைந்து முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
 
• அல்சரினால் குடல் புண்ணாகி வெந்துபோயிருக்கும். காய்ச்சிய பாலில் நாலு குங்குமப்பூ சேர்த்து ஒரு மண்டலம் குடித்துவர, புண் ஆறிவிடும்.

• கர்ப்பிணிப் பெண்கள் எட்டாம் மாதத்தில் தினமும் இரண்டு குங்குமப்பூ கீறலை காய்ச்சிய பாலில் கலந்து குடித்துவர இரும்புச் சத்து உடலில் சேர்ந்து குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்.
 
• நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளுடன் குங்குமப்பூ கீறல் 15 சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மீது தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இவ்வாறு வாரம் ஒருமுறை தடவிவர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போயேபோய்விடும். மேலும் வராமல் தடுக்கும்.

• இரண்டு ஸ்பூன் பாலில் ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பைப் போட்டு ஊற வையுங்கள். இதனுடன் பத்து குங்குமப்பூ கீறலைச் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். டல்லான முகமும் டாலடிக்கும்!

• வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவைச் சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வாயும் மணக்கும்.
 
• குழந்தை பிறந்ததும் தாய் மூன்று கிராம் குங்குமப்பூவை தண்ணீர் விட்டு அரைத்து உருண்டையாக செய்து சாப்பிட, வயிற்றில் உள்ள தேவையில்லாத கசடுகள் 
வெளியேறும்.
 
• 25 வயதை எட்டியும் பருவம் எய்தாத பெண்களுக்கு தினமும் குங்குமப்பூவைக் கலந்து கொடுத்துவந்தால் ஆறே மாதத்தில் பூப்படைந்துவிடுவர்.

thanks to maruthuva ulagam

Monday, July 29, 2013

கர்ப்பகாலத்தில் எடுக்கும் ஸ்கேன் எது எது ?

ஒரு பொருளை, ஒரு உடலை, ஒரு உறுப்பை ஆராய்ந்து பார்ப்பது ஸ்கேன்.  இந்த ஸ்கேனில், அல்ட்ரசவுண்டு ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.அய் ஸ்கேன் என்று பலவகை உண்டு. கர்ப்ப காலத்தில் நாம் உபயோகிப்பது அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மட்டுமே. மிகவும் அத்தியாவசியமானால் மட்டும் எம்.ஆர்.அய் ஸ்கேன் எடுப்பதுண்டு.
ஸ்கேன் எப்படி செய்யப் படுகிறது ? 
ஒலி அலைகள் உடலுக்குள் செலுத்தப்பட்டு  அவை திரும்பிப்பெறப்படுகிறது. கண்ணாடியில் ஒளி பட்டு திரும்பும்போது உருவம் கிடைப்பது போல, அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் ஒலி அலைகள் உபயோகப்படுத்தபடுகிறது. இவை எக்ஸ்ரே போன்றது கிடையாது. எக்ஸ்ரே கர்ப்பகாலத்தில் முடிந்தவரைக்கும் தவிர்க்கப்படுகிறது. எக்ஸ்ரேயில் தீமைகள் உண்டு. ஆனால் அல்ட்டராசவுண்டு ஸ்கேனில் தீமைகள் கிடையாது.
ஸ்கேன் எப்பொழுது எடுக்க வேண்டும்? ஏன் எடுக்கவேண்டும்? 
முதலில் ஏன் எடுக்க வேண்டும் என்று பார்ப்போம். முதல் மூன்று மாதங்களில் பெண் பரிசோதிப்பதின் மூலமோ, சிறுநீர்ப்பரிசோதனை மூலமோ, குழந்தை நன்றாக இருக்கிறதா, ஒன்றா அல்லது இரண்டா, வளர்ச்சி சரியாக இருக்கிறதா? என்ற விஷயங்கள் தெரியாது. இவற்றை கண்டுபிடிக்க ஸ்கேன்  அவசியமாகிறது. ஒன்றுமே பிரச்சனை இல்லையென்றால், முதல்  கேன்11-14 வாரங்களில்
எடுக்கலாம். ஆனால் கர்ப்பமாயிருக்கும் பெண்ணிற்கு வயிறு
வலி அல்லது சிறிது  இரத்தபோக்கு ஏற்பட்டால் உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். அது 6 வாரமாயிருந்தலும், 8 வாரமாகயிருந்தாலும்  பரவாயில்லை.
முதல் கர்ப்பம் டியூபில் தங்கியிருந்ததாகவோ, அல்லது அபார்ஷன் ஆகியது என்றாலும் அடுத்த கர்ப்பத்தில் சீக்கிரமே (கர்ப்பம் என்று கண்டுபிடித்தவுடனே ) ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.
மாதவிடாய் சரியாக மாதாமாதம் வராமல் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஆகிறவர்களும் சீக்கிரமே ஸ்கேன் எடுப்பது அவசியம். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் மூலம், டெலிவரி ( பிரசவ ) தேதியை சரியாக குறிக்க முடியும். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேனால் எந்தபிரச்சனையும் ஆகாது.
சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் வயிறு வழியாக அல்லாமல்,
பிறப்புறுப்பு (VAGINAL SCAN) வழியாகவும் எடுக்க
வேண்டி இருக்கலாம். அதனாலும் ஒன்றும் பயமில்லை.
கர்ப்பத்திற்கு எந்தவிதமான கெடுதலும் ஆகாது.
சில சமயங்களில் முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று
முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம். உதாரணத்திற்கு முதல் முறை பார்க்கும் போது குழந்தையின் இதயத்துடிப்பு தெரியவில்லை என்றால் இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டியிருக்ககும். தொடர்ந்து சிறிது சிறிது இரத்தப்போக்கு  இருந்து கொண்டேயிருந்தால், குழந்தை நன்றாக இருக்கிறதா  என்று ஒவ்வொரு முறையும் ஸ்கேன் எடுக்க வேண்டி  இருக்கலாம். இவ்வாறு ஆரம்பத்திலேயே அடிக்கடி ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.
11முதல்14 வாரங்கள் வரை எடுக்கும்  ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு என எல்லாவற்றையும் பார்க்க முடியும். ஆம் இந்த மாதத்திலேயே எல்லா உறுப்புகளும் வந்து விடும். அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பும் பெரிதாவதும், வேலை செய்ய முதிர்ச்சிஅடைவதும் நடக்கும். இந்த சமயத்தில் குழந்தையின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (NUCHEAL THICKNESS). இது அதிகமாக இருந்தால், குழந்தைக்கு சில குறைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அம்மாதிரி இருந்தால் இன்னும் சில இரத்த பரிசோதனைகள், உள்ளுக்குள் இருக்கும் குழந்தையினுடைய இரத்த பரிசோதனை ஆகியவை செய்ய நேரிடலாம்.
DOWN’S SYNDROME  என்பது மரபணுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ஒரு நிலை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், முகம் சற்று சீனாக்காரர்கள் போல் இருக்கும். கண்கள் குறுகி, மூக்கு சப்பையாக, நாக்கு தடித்து, கழுத்து சிறிதாக, மூளை வளர்ச்சி குறைந்து காணப்படுவார்கள். இந்த நிலையில் குழந்தையின் கழுத்து தோல் (NUCHEAL THICKNESS) தடித்து காணப்படும்.
அடுத்து எந்த மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும் ? 
20-22 வாரங்களில் எடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஸ்கேன். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய இது சரியாண தருணம். இதற்கு முந்தைய ஸ்கேனில் உடல் உறுப்புகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை ஆராய்வது கடினமாக இருக்கும். கடைசி சில வாரங்களில் (பிரசவ தேதி நெருங்கும் சமயத்தில்) எடுக்கும் போது குழந்தை மிகவும் பெரிதாக வளர்ந்து இருக்கும். நீர் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் பார்ப்பதும் கஷ்டம்.
எனவே குழந்தைக்கு ஏதேனும் ஊனம், குறைபாடு இருக்கிறதா
என்று கண்டறிய 20-22 வாரங்களில் செய்யும் ஸ்கேனே தகுந்தது.
மேலும்  தீர்க்க முடியாத குறைபாடுகள் உள்ள குழந்தை இருக்கும்
பட்சத்தில், அபார்ஷன் செய்யவும் இந்த சமயத்தில் முடிய்ம். 20-22
வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN (அதாவது
குறைபாடுகள் இருக்கிறதா என்பதை குறிப்பாக கவனித்தல்) என்று
சொல்வார்கள்.
கர்ப்ப காலத்தில் ஒரே ஒரு ஸ்கேன் தான் என்னால் எடுக்க முடியும் என்று யாராவது சொன்னால் அவர்களை இந்த மாதத்தில் செய்து கொள்ளச் செய்வது நல்லது. 5 ஆம் மாதத்தில் (20 – 22 வாரங்களில்)  செய்யும் இந்த ஸ்கேன் மிக முக்கியமானது என்பதால் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. இந்த ஸ்கேனை நல்ல பெரிய மெஷின் வைத்து கர்ப்ப ஸ்கேன்கள் அதிகம் செய்யும் அனுபவமுள்ள டாக்டரிடம் செய்து கொள்வது நல்லது. கட்டாயம் படங்கள், ரிப்போர்ட்டுகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த ஸ்கேன் பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுத்தால் போதும்.
இந்த ஸ்கேன் எதற்காக பயன்படும்?
பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுக்கும் ஸ்கேன் குழந்தையின்
தலை கீழே இருக்கிறதா, குழந்தையின் எடை எவ்வளவு,
குழந்தையின் அசைவுகள் நன்றாக இருக்கிறதா?, குழந்தையைச்
சுற்றி இருக்கும் நீர் போதுமான அளவு இருக்கிறதா?
என்பவற்றைச் சொல்லும். இந்தத்தகவல்களை வைத்துக்கொண்டு
டாக்டர் எவ்வளவு நாள் காத்திருக்கலாம், தானே வலி எடுக்கும்
வரை பொறுத்திருக்கலாமா?
ஆபரேஷன் செய்ய வேண்யிருக்குமா என்று முடிவெடுப்பார்கள்.
சிலசமயங்களில், குழந்தையின் வளர்ச்சி குறைந்திருப்பதாக
சந்தேகம் வந்தாலோ, நீர் குறைவாக இருக்கிறது என்று
நினைத்தாலோ, குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலோ, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஸ்கேன் எடுக்க வேண்டி வரலாம்.
கடைசி வாரங்களில் எடுக்கும் இந்த ஸ்கேனில் குழந்தைக்கு
குறைபாடுகள் இருந்தால் கண்டுபிடிப்பது கடினம். பிரசவ
தேதியும் எப்பொழுதுமே முதல் மூன்று மாதங்களில் செய்யும் ஸ்கேன் வைத்து நிர்ணயிக்கப்படுவது தான். கடைசி வாரங்களில் பிரசவ தேதியை மிகச்சரியாக நிர்ணயிக்கமுடியாது.
ஆகவே ஒவ்வொரு கால கட்டத்தில் எடுக்கும் ஸ்கேனுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. ஸ்கேன்  என்பது  நிச்சயமாக  ஒரு  உபயோகமான பரிசோதனை. ஆனால் அது 100 % நம்பகூடியது அல்ல. ஸ்கேன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, கண் பார்வை, காது கேட்கும் திறன், சில தோல் வியாதிகள், சில இருதய வியாதிகள் மற்றும் சில வியாதிகளும் கண்டுபிடிக்க முடியாது. பார்க்கும் போது குழந்தை எந்த நிலையில் உள்ளது, என்ன மாதிரி ஸ்கேன் மிஷின் வைத்து பார்க்கிறோம், எந்த கால கட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ரிசல்ட் மாறலாம்.

Saturday, July 27, 2013

பட்டு A to Z




முதல் சேலைபிரியமானவர்கள் பரிசாகத் தந்த சேலைகூறைச் சேலை,வளைகாப்புச் சேலை... ஒவ்வொரு சேலையும் ஏதோ ஒரு சுவாரஸ்யமான  நினைவைச் சுமந்து கொண்டிருக்கும். அதுதான் பட்டுச் சேலையின் சிறப்பு. எத்தனை சேலை இருந்தாலும்அலுக்காது. நைந்துகரைந்துஜரிகை உதிர்ந்து கொட்டுகிற நிலைக்குப் பழையதாகிப் போனாலும்சேலையின் சென்டிமென்ட் அத்தனை சீக்கிரத்தில் அதை அப்புறப்படுத்த விடாது.  அந்தளவுக்கு பட்டின் மேல் பற்றுண்டு பெண்களுக்கு. 


பட்டுக்கு மட்டும் ஏன் இத்தனை பகட்டு?


பட்டின் வரலாற்றினைப் புரட்டினால் தெரிகிறது உண்மை...

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்புசீனப் பேரரசி ஒருவர்தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த போதுமுசுக்கொட்டைச் செடியில் அழகாகக்  கட்டப்பட்டிருந்த ஒரு கூட்டினைப் பார்த்திருக்கிறார். அதிலிருந்து ஒரு இழையைப் பிடித்து இழுத்திருக்கிறார். அது நீண்டுகொண்டே போகமொத்தக்  கூடுமேஒரே இழையால் ஆன விவரம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தோட்டத்தில் இருந்த மற்ற கூடுகளையும் சேகரித்து,இழைகளைப் பிரித்து,  சிறியதாக ஒரு உடை தயாரித்துப் பார்த்தாராம். 

அந்த நூலிழையும்அதில் தயாரித்த உடையின் நேர்த்தியும் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போகபட்டு நூலாடைகள் தயாரிப்புக்கு அதுவே  ஆரம்பமாக அமைந்திருக்கிறது. ஆனாலும்பட்டு என்பது ராஜகுடும்பத்துக்கு மட்டுமே உரித்தானது என்று ரகசியம் காக்கப்பட்டதாம். அதன் பிறகு சுமார்  2,500ஆண்டுகள் கழித்துஒரு ரோமானிய மன்னன்,சீன இளவரசியைத் திருமணம் செய்யஅதுநாள் வரை சீனர்களுக்கு மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பட்டுஇடம் பெயர்ந்திருக்கிறது. 

இருப்பினும்பட்டுப் புழுவை வளர்க்கத் தெரியாததால்அதையடுத்த சில காலத்துக்கும் சீனாவில் மட்டுமே பட்டின் கொடி பறந்து கொண்டிருந்ததாம்.  இதைத் தெரிந்து கொண்ட ஜப்பானியர்கள்பட்டுப் புழு வளர்க்கத் தெரிந்த சீனப்பெண்களைக் கடத்திக் கொண்டும்வேலைக்கு அழைத்துச் சென்றும்,  அவர்கள் மூலம் தொழில் நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டுபட்டு நூல் உற்பத்தியில் சீனர்களையே தோற்கடித்ததாகவும் சொல்லப்படுகிறது. 

அதன் பிறகு ஜப்பான்பட்டு நெசவுக்கான காப்புரிமையை மற்ற நாடுகளுக்கும் தர முன் வந்ததையடுத்துஇந்தியா உள்பட பல நாடுகளுக்கும் பட்டு  நெசவு பரவிபட்டின் புகழ் உலகெங்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது. இத்தனை சிரமங்களுக்குப் பிறகு கிடைத்ததாலோ என்னவோ பட்டுக்கு அத்தனை பெருமை!  பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல்பட்டில் காசைக் கொட்டிபீரோ நிறைய அடுக்கி வைக்கிற உங்களுக்குத் தெரியுமா பட்டு எப்படித்  தயாராகிறது என்று?

பட்டின் வகைகள் 

ஒக் டசார் பட்டு 

ஒக் என்கிற செடியை உணவாகக் கொள்ளும் பட்டுப்புழுவிலிருந்து கிடைக்கும் இது மெலிதாக இருக்கும். மணிப்பூர்இமாசலப்பிரதேசம்அசாம்,  மேகாலயாஜம்மு,காஷ்மீரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பட்டு உற்பத்தியில் உலகளவில் நம்பர் 1 -சீனா.

டசார் பட்டு 


இதன் இழைகள் தாமிர நிறத்தில் சற்றே முரடாக இருக்கும். நெகிழ்வுத்தன்மை இருக்காது. மெத்தை விரிப்புக்கும்உள் அலங்காரங்களுக்கும் அதிகம்  பயன்படுகிறது. ஜார்கண்ட்,சத்தீஸ்கர்ஒரிசாமகாராஷ்டிரம்,மேற்கு வங்காளம்ஆந்திரா மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மலைவாழ் மக்கள் இந்தப் பட்டுத் தயாரிப்பில் சிறந்தவர்கள்.

மல்பெரி பட்டு 

உண்ணும் உணவுக்கேற்பவேறுபட்ட புழுக்களில் இருந்து வணிகரீதியாக வகை பட்டுகளைப் பெறலாம். அவற்றில் முதலிடம் மல்பெரி பட்டுக்கு.  மல்பெரி செடியை உணவாக உட்கொள்ளும் ஒரு வகை பட்டுப்புழுவிலிருந்து இந்தப் பட்டு கிடைக்கிறது. இந்தப் பட்டுப்புழுக்களை அறைகளிலேயே  வளர்க்கலாம். இந்தியாவில் கர்நாடகாஆந்திராமேற்கு வங்காளம்தமிழ்நாடுஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் மொத்த பட்டு உற்பத்தியில் 92  சதவிகிதம் மல்பெரி பட்டுதான். அணிவதற்கு மிக மென்மையானது இது.

முகா பட்டு 

இதன் பூர்வீகம் அசாம். இது இயற்கையான மஞ்சள் நிறத்தில் இருக்கும். நறுமணமிக்க செடிகளைத் தின்று வளரும் பட்டுப்புழுக்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் சற்று கா
ஸ்ட்லியானது.

எரி பட்டு 

ஆமணக்கு இலைகளை உட்கொள்ளும் பட்டுப்புழுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மலைவாழ் மக்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்காக  பழங்காலத்தில் இருந்து உற்பத்தி செய்து பயன்படுத்தக் கூடிய பட்டு வகை இது. இந்தியாவின் வடகிழக்கு மற்றும் அசாம் மாநிலங்களில் தயாராகிறது.

பட்டுப்புழு வளர்ப்பு முறையை ஆங்கிலத்தில் சில்க் ஃபார்மிங்’ என்கிறார்கள். பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலமான 30 நாள்களுக்கு மிகப்  பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தரமான மல்பெரி இலைகளைத் தீனியாகத் தரவேண்டும். மனிதர்களை மாதிரியே அவற்றுக்கும் சுத்தமான சுற்றுச்சூழலும்,பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் அவசியம். அந்தச் சூழலைக் கொடுக்கும்படியான ஒரு தனி புழுவளர்ப்பு மனை அமைத்து,பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படும். 

இந்த புழு வளர்ப்பு மனையில் வருடத்துக்கு 10 முதல் 12 முறைகள் புழு வளர்ப்பு நடைபெறும். இப்படிப் பார்த்துப் பார்த்து பதவிசாகபத்திரமாக வளர்க்கப்படுகிற பட்டுப்புழுக்களை ஒரு கட்டத்தில்கொத்தாகப் பிடித்துகொதிக்கிற வெந்நீரில் போடுவார்கள். துடிக்கத் துடிக்க இறக்கும் அவை,  அத்தனை நாள் தன்னைப் போஷாக்காக வளர்த்தவர்களுக்கு நன்றிக்கடனாகபட்டுநூலை விட்டுச் செல்லும். அந்தக் கட்டத்தில் பட்டுப்புழுக்களை  கொல்லாவிட்டால்அவை அடுத்து பட்டாம்பூச்சிகளாக மாறி,பறந்து விடுமே!

ஒரு கிலோ பட்டு நூல் தயாரிக்க, 3 ஆயிரம் பட்டுப்புழுக்கள் சுமார் 104 கிலோ மல்பெரி இலைகளைத் தின்ன வேண்டும். சுத்தமான பட்டுக்காக 5  ஆயிரம் பட்டுப்புழுக்கள் உயிரிழக்க வேண்டும். இது சிம்பிளான பட்டுச்சேலைக்கான கணக்கு. அகலமான ஜரிகை வைத்த பார்டர்உடல் முழுக்க  ஜரிகை என நீங்கள் விரும்பும் புடவையின் ஆடம்பரத்தைப் பொறுத்துஉயிர்த்தியாகம் செய்கிற பட்டுப்புழுக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே  போகும்.

- சாஹா
படம்:  புதூர் சரவணன்
நன்றி குங்குமம் தோழி and 
தினகரன் நாளிதழ் 


Thursday, July 25, 2013

சீனா ஜோசியம் என்ன குழந்தை பிறக்கும் அட்டவணை?

இனி சோசியத்துக்கு போலாம்! இதுதான் அட்டவணை!




இதுல 18,19,20, என்று உள்ளது கர்பிணிகளின் வயது, ஜனவரி,பிப்ரவரி,என்று உள்ளது குழந்தை உருவான மாதம் இரண்டையும் இணைத்துப்பார்த்தால் பெண்ணா இல்லை ஆணா என்று தெரிந்து விடும் இது 98.7% சரியாக இருக்கிறது.

Example Chart:-

Tuesday, July 16, 2013

கர்ப்பிணிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீங்கள் கர்ப்பம் என்பது தற்போது உறுதிசெய்து இருக்கீறீர்கள் என்றால் உங்களுக்கு பலர் ஆலோசனை கூறுவார்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள்  மற்றும் நண்பர்கள் வட்டம் என அனைவரும் உணவு சம்பந்தமான அறிவுரையிலிருந்து அனைத்தையுமே கூறுவார்கள். உணவு வகைகள் அனைத்துயும்  சாப்பிட முடியாது. சாப்பிட நினைத்தாலே வாந்தி வரும் என பல மாறுதல்கள் நமது உடலுக்குள் நடக்கின்றது.. கர்ப்பகாலத்தில் ஆபத்தை  விளைவிக்கும் சில உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் ஏனெனில் கர்ப்பகாலத்தில் ஒவ்வாத உணவுகள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்  உணவாக உள்ளது.. கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் இதோ

சீஸ் வகைகள்

கர்ப்ப காலத்தில் சீஸ் வகைகளை தவிர்க்க வேண்டும். பல வகை சீஸ்கள் உள்ளது. மென்மையான பாலாடைக்கட்டியான வெள்ளை நிறத்ததில் உள்ள  பாலாடைக்கட்டியில் நீல நிறங்களை சேர்க்கின்றனர். வெண்ணெய் தயாரித்தலில் அச்சு பயன்படுத்தும் போது லிஸ்டீரியா சேர்க்கப்படுகிறது.  லிஸ்டீரியா சேர்ப்பது அரிதானது என்றாலும் நோய் தொற்றை ஏற்படுத்தி கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறப்பதற்கும் வழிவகுக்கிறது. பல  உணவுகளில் லிஸ்டீரியா பயன்படுத்துவதால் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. கர்ப்பிணி பெண்கள் வெண்ணெய் சாப்பிட விருப்பப்பட்டால் கடின  தன்மை கொண்ட வெண்ணையான சீதார்(நீலீமீபீபீணீக்ஷீ) பாலாடைக்கட்டியை சாப்பிடலாம். அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது.

முட்டைகள்


கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் முட்டைகளை சாப்பிடலாம் ஆனால் நன்கு வேகவைக்காத முட்டைகள் சால்மோனெல்லா பாக்டீரியாவை  கொண்டிருப்பதால் சிசுவிற்கு தீங்கு விளைவிக்கும் ஆதலால் நன்கு வேகவைத்த முட்டைகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. நன்கு சமைக்கப்படாத  முட்டையுடன் சேர்த்த பொருட்களில் மேயனைஸ் கொண்டிருப்பதால் அவை கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் தவிர்க்க பட வேண்டியது. முட்டையின்  மஞ்சள் மற்றும் வெள்ளை கருவை நன்கு வேகவைத்த பின் சாப்பிட்டால் பாதுகாப்பானது.

வைட்டமின ஏ அதிகளவு கொண்டிருக்கும் உணவுகள்


முன்பு சாப்பிட்ட உணவுகளில் வைட்டமின் ஏ எடுத்துக்கொண்டதை விட குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக வைட்டமின் ஏ நிறைந்த  உணவுகள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். கல்லீரல் போன்றவை அதிக வைட்டமின் ஏ கொண்டுள்ளது. 

குறிப்பிட்ட மீன் வகைகள்

தயார் நிலையில் வைக்கப்பட்ட மீன் வகைகளான டுனா, ஸ்வோர்டுபிஷ்ஷில் மற்றும் சுறா மீன்கள் போன்றவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை  பாதிக்கும் பாதரசத்தை உயர்ந்த அளவு கொண்டுள்ளது. எண்ணெய் பசை அடங்கிய மீன்களான சல்மான் பிரஷான டுனா கானாங்கொளுத்தி, ஆகியவை  பாதுகாப்பானது. வாரத்தில் ஒரு முறை சாப்பிடும் போது இரண்டு துண்டு மீன்களை எடுத்துக்கொள்ளலாம்.

காஃபின்

காஃபின் பல்வேறு உணவுகள் மற்றும் குளிர்பானங்களில் கலக்கப்படுகிறது. காஃபின் குறைந்த எடையுள்ள குழந்தை மற்றும் கருச்சிதைவு போன்ற  ஆபத்தை அதிகரிகும் ஆதலால் கவனமாக இருக்க வேண்டும்.